சிவனின் வெவேறு அபிஷேகப் பலன்கள்
மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், மகாதேவன் அபிஷேகப் பிரியர் ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார்
>> நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் எமபயம் விலகும்.
>>அருகம்புல் ஜலத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.
>>பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.
>>பசும்பால் அபிஷேகத்தினால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
>>கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் விருத்தி யாகும்.
>>சிவலிங்கத்துக்கு தயிர் அபிஷேகம் செய்தால், பலம், ஆரோக்கியம், தேஜஸ் கூடும்.
>>மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும். சந்தோஷம் பிறக்கும்.
>>புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்.
>>தேன் அபிஷேகத்தினால் சிவனாருக்கு அபிஷேகம் செய்தால், ஆரோக்கியம் கூடும். ஆயுள் பலம் கிடைக்கும்.
>>இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்துகளும் கிட்டும்.
>>பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் விலகும். புண்ணியங்கள் பெருகும்.
>>உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். ஞானம் பெறலாம்
>>சந்தன அபிஷேகம் செய்து சிவனாரைப் பிரார்த்தனை செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
>>ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் முகம் தேஜஸ் பெறும். சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்
>>வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம்.
>>சுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பக் கிடைக்கும்.
>>திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியம் வெற்றி தரும்.
>>அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், பதவி முதலானவை கிடைக்கும். மோட்ச கதியை அடையலாம்
>>நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும்.
>>கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவார்கள்.
>>கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சகல யோகங்களும் பெற்று வாழலாம்.
>>மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
>>மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
>>நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தனம் தான்யம் பெருகும். வீடு மனை யோகம் கிட்டும்.